கொழும்பில் விசேட தேடுதல்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் நேற்று (14) முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்போம்” எனும் தொனிப் பொருளின் கீழ் தேசிய பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

Spread the love