ஒரு நாள் கடவுச் சீட்டுக்கு இன்றுமுதல் 20,000 ரூபா

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய கடவுச் சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கவுள்ளது.

இதன்படி, இனிமேல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச் சீட்டு பெற 20.000 ரூபா அறவிடப்படவுள்ளது. சாதாரண சேவைகளின் கீழ் கடவுச் சீட்டுக்கான கட்டணம் 3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Spread the love