கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் நான் மன்னித்து உங்களுடன் இணைந்து நிற்கின்றேன்

எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்தவண்ணமிருக்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் நான் மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து நிற்கின்றேன். நாங்கள் ஐக்கியப்படவேண்டிய தருணம் இது. மாற்றத்திற்காக குரல்கொடுக்கும் மில்லியன் கணக்கான குரல்களின் எதிரே எதனாலும் நிற்கமுடியாது எனவும் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.

Spread the love