ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை-இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம் மூலம் இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 432.76 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் ஜனவரி 1, 2020 அன்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 1,774.77 பில்லியன் பணத்தினை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love