கொரோனா தொற்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில்

மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் – முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதில், நேற்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதை யடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவரை கொரோனா சிகிச்சை கண்காணிப்புக்காக அனுமதித்துள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love