காகிதங்களுக்கு தட்டுப்பாடு பத்திரிகை தொழில் பாதிப்பு

பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தும் காகிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிகை தொழிற்றுறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர் என பத்திரிகை தொழிற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.  இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு தொன் காகிதம் 450 டொலர் தட்டுப்பாடு மற்றும் உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது. 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன், பத்திரிகை தொழிற்றுறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

Spread the love