எரிபொருளோடு 2 கப்பல்கள் இந்தவாரம் வருகின்றன

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலைக் கொண்டு வரவுள்ளது என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டுக்கு டீசல் கப்பலும் வரவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு எரிபொருள் கப்பல்களும் வந்த பின்னர் தற்போதைய எரிபொருள் வரிசைகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Spread the love