உலக வங்கி இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்- மார்ட்டின் ரைசர்

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, ​​இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாக உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் ,நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாத தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான கடனில் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Spread the love