இலங்கை மக்களுக்காக நிவாரண நிதி வழங்குகின்றார் விஜயகாந்த்


பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவ இந்தியாவின் தேசிய முற்போக்குத் திராவிட கழகமும் முன்வந்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாது தவிக்கும் மக்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் அரிசி, பருப்பு, பால் மா உள்ளிட்ட பொருள்களையும், உயிர்காக்கும் மருந்துகளையும் அனுப்ப தமிழ் நாடு அரசாங்கம் தயாராகியுள்ளது.

இதற்கு மத்திய அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைவாகத் தமிழகத்தின் உதவிகள் விரைவில் இலங்கைக்குக் கிடைக்கும். இந்த நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியத்துக்கு தேசிய முற்போக்குத் திராவிடக்கழகம் இந்திய நாணய மதிப்பில் 5 லட்சம் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதனைக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

Spread the love