இலங்கை குறித்து பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல், மனித உரிமை நிலை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் இடம் பெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின் வரிசை வணிகக் குழுவின் இந்த விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பமான விவாதங்களை முன்வைக்க, பின்வரிசை வணிகக் குழு வாய்ப்புகளை வழங்குகிறது.

முன்னதாக கடந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வின்போது பிரித்தானியாவின் தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவே, இலங்கைக்கு எதிரான யோசனையை முன்னகர்த்தி அதனை நிறைவேற்றியது.  இவ்வாறான நிலையிலேயே இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல், மனித உரிமை நிலை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

Spread the love