இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதுடன், மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

12 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக்கோரி தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Spread the love