இமயமலையில் உயரத்திற்கு ஏறி சாதனை படைத்த 12 வயதுச்சிறுவன்

கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயதுச்சிறுவன், இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில், 14 ஆயிரம் அடி உயரத்தை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளான்.

சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி – வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா, ஆட்டிஸம் குறைபாட்டினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இவரை மலையேற்றத்திற்கு அனுப்பிவைத்த பெற்றோர், நன்கு பயிற்சி பெற வைத்தனர். இந்த நிலையில், பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்சுடன் யத்தீந்ரா, இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில், ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். வெறும் நான்கு நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தையடைந்து அசத்திய யத்தீந்ரா, அங்கு இந்தியத் தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Spread the love