இந்தியாவை வென்றது தென்னாபிரிக்கா

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இதில் ரசி வன் டேர் டுஷன் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களையும், ரெம்பா பவுமா 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இருவரும் 204 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிகர் தவான் 79 ஓட்டங்களையும், விராட் கோலி 51 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிகர் தவான் 79 ஓட்டங்களையும், விராட் கோலி 51 ஓட்டங்களையும், ஷர்டூல்தாகூர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பெற்றனர். பந்துவீச்சில் லுங்கி நிகிடி, ரம்ரைஸ் ஷம்ஸி, அன்ட்லி பெசுவாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலமாக தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Spread the love