இடமிருந்து வலமாக திருக்குறள் எழுதி சாதனை

திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் இடமிருந்து வலமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.

உலக பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறள். இதனை இயற்றிய திருவள்ளுவர் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான அறிவு பூர்வமான கருத்துக்களை எளிய முறையில் தெரிவித்துள்ளார். அதனை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் திருக்குறள் குறித்து இன்றைய இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் இடமிருந்து வலமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.

Spread the love