இங்கிலாந்து அணியின் அழைப்பை நிராகரித்த மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான அழைப்பை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது. மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர் இங்கிலாந்தின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து வரும் மஹேல, தேசிய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என பலமுறை கூறி வந்தார். அண்மையில் இங்கிலாந்து அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ரொபர்ட் கீ, இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேலவை பொறுப்பேற்குமாறு கோரியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டியதன் காரணமாக மஹேல இந்த அழைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

Spread the love