ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்- மத்திய வங்கி

இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து, மே மாதம் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்ருமானம் 16.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இலங்கையானது ஆடை ஏற்றுமதி மூலம் 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்கைள வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார பின்னடைவே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.   அதேவேளை கடந்த வருடத்தில் முதல் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.1 வீத வருமானக் குறைப்பு காட்டுவதுடன் ஏனைய முழுமையாக தைத்த ஆடைகள்; மூலம்கிடைக்கும் வருமானம் 19 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Spread the love