அரசியல் கட்சிகள் பதிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (24/01) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புங்சிஹேவா தெரிவித்தார்.

கடந்தாண்டு பதிவு செய்ய சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 3 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சமீபத்தில் தீர்மானித்திருந்தது.

இதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டன.

Spread the love