அமெரிக்கா-தாய்வான் இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்சனை ஒரு புறமிருக்க தாய்வானுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் 5ஜி தொலை தொடர்பு வசதிகள் உள்ளிட்ட 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாகியுள்ளது.

இதனை தாய்வான் நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் வாங் மெய் ஹவா உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்: அமெரிக்கா மற்றும் தாய்வானைச் சேர்ந்த நிறுவனங்கள் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் தாய்வான் இடையே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் தொலைத் தொடர்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே யான உறவு மேலும் சிறப்பாக அமையும். இந்த பயணத்தின் மூலம் தாய்வானுக்கு மேலும் பல துறைகளில் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் நேரடி ஒப்பந்தமெனவும் தொழில் நுட்பம் மற்றும் வாத்தக முதலீடு சார்ந்த சந்திப்பில் கையெழுத்தாகியுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்து.

Spread the love