5000 கறவை கால்நடைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானம்

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை கால்நடைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவிததுள்ளார். அத்துடன், பசும்பால் உற்பத்தியை மற்றும் பாவனையை அதிகரிக்கும் நோக்கில், பாரிய அளவிலான பால் பண்ணைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love