30 வருடங்களின் பின் வெளிவந்த பேய் கிராமம்

ஸ்பெயினில் தண்ணீரில் மூழ்கிய கிராமம் 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் வெளியே தெரிய தொடங்கியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


கடந்த 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்ட alto Lindoso அணையால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு இடையே உள்ள கிராமங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. தற்போது அந்த அணையில் நீர் வற்ற தொடங்கியதால் கிராமத்தின் சிதிலமடைந்த குடியிருப்புகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் வசித்த வீடுகளின் கட்டங்கள் உருக்குலைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் கிராமத்திற்கு பேய் கிராமம் என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இதையடுத்து பேய் கிராமத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Spread the love