2023 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத்திற்கான பொது கலந்தாய்வு ஆரம்பம் – PUCSL

2023 ஆம் ஆண்டிற்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்குதாரர்களின் ஆலோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஆரம்பித்துள்ளது. PUCSL சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்பட்டதாக PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் 66.2% வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கவும் அவர்களின் கருத்துக்களைப் பெறவும் இன்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை இன்று முதல் 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு PUCSL தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுத்துப்பூர்வ கருத்துக்களை தொலைநகல் (011 2392641), மின்னஞ்சல் (consultation@pucsl.gov.lk) மூலமாகவோ அல்லது “உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் 2023 தொடர்பான பங்குதாரர்களின் ஆலோசனைக்கு” எழுதுவதன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். வணிகக் கோபுரம், இல. 28, புனித மைக்கேல் வீதி, கொழும்பு 3.

வாய்மொழி பொது கலந்தாய்வுக்கான திகதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். ஒன்லைனிலும் வாய்மொழி அமர்வுக்கு வசதி செய்யப்படும். ஆலோசனைத் தாளை PUCSL அதிகாரப்பூர்வ இணையதளமான www.pucsl.gov.lk இலிருந்து பெறலாம்.

Spread the love