ஸ்ரீநகர் அருகே ஆயுததாரிகள் படையினர் இடையே மோதல் ..

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே நவ்கம் பகுதியில் ஆயுததாரிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

அண்மையில் கன்மோச் பகுதியில், சர்பாஞ்ச் சமீர் பாட் என்ற வீரரை கொன்ற லஸ்கர் இ தொய்பா மற்றும் பிற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஆயுததாரிகள் ஸ்ரீநகர் அருகே நவ்கம் பகுதியில் இராணுவப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் கூட்டு முயற்சியின் காரணமாக, ஆயுததாரி ஒருவரால் நடத்தப்படவிருந்த தாக்குதல்  முறியடிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை காஷ்மீர் போலீஸ்  ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்தார்

Spread the love