வௌிநாட்டு தொழிலாளர்கள் குறித்து மத்திய வங்கி அறிக்கை!

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி வௌிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரை வௌிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.   

Spread the love