வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் நடவடிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.


அதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, திறைசேரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

Spread the love