விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க ஒன்றிணைந்து செயற்பட மோடி அழைப்பு

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்குவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, பிரதமர் நரேந்திரமோடி, அழைப்பு விடுத்தார். சுவாமி விவேகானந்தரின் 160ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ருவிற்றரில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் மறுமலர்ச்சிக்காக, விவேகானந்தர் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதனையும், நாட்டைக் கட்டமைக்கும் பணியில் பங்கேற்பதற்கு, இளைஞர்களைத் தூண்டியதனையும் அவர் நினைவுகூர்ந்தார். நாட்டிற்காக, விவேகானந்தர் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Spread the love