வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்

வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.


இன்று அதிகாலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள் காலையில் அலுவலகத்திற்கு வருகை வந்த உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.


அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வடக்கு மாணத்தைச் சேர்ந்த 186 தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love