ரஷ்யா கைப்பற்றிய நகரை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டது

ரஷ்ய உக்ரைன் போரானது தனது கோரத்தாண்டவத்தை 32 நாளாகவும் நடாத்திக்கொண்டே இருக்கிறது. போரின் போது உக்ரைனால் கைவிடப்பட்டு ரஷ்யபடைகளால் கைப்பெற்றப்பட்ட செர்னோபில் அணு உலை நிலையமானதையும் அணு உலை ஊழியர்கள் தங்கி இருக்கும் நகரத்தையும் உக்ரைன் ராணுவம் மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யாவால் தொடங்கப்பட்ட போரானது இன்று 32-வது நாளாகவும் நீடித்த வண்ணமே உள்ளது. ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் முழு மூச்சாக கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

ரஷ்ய படைகள் தாக்குதலைத் தொடங்கிய சில நாட்களிலேயே உக்ரைனின் சிறிய நகரங்களை அது கைப்பற்றியது. அதேபோல் தலைநகர் கீவ், மற்றும் புறநகர் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ரஷ்ய கைப்பற்றிய பகுதிகளை மீட்க உக்ரைன் ராணுவ வீரர்கள் மிகவும் தீவிரமான பதில்த்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கீவ் நகரை அண்டிய பகுதிகளில் சிலவற்றை உக்ரைன் மீண்டும் தம்வசப்படுத்தி மீட்டன, இதன் காரணமாக அங்கிருந்த ரஷ்ய படைகள் அங்கிருந்து பின்வாங்கி சென்றன.

இந்தநிலையில் ரஷ்ய படையிடம் இருந்து ஒரு நகரை உக்ரைன் ராணுவம் முழுமையாக மீட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு நகரமான “ட்ரொஸ்டியானெஸ்” என்கிற நகரை ரஷ்யா தனது படையெடுப்பின்போது முதல் நகராக கைப்பற்றியது. அங்கு ரஷ்ய படைகள் ஸ்திரமாகியதுடன் உக்ரைன் ராணுவ வீரர்களை எதிர்த்தவண்ணமேயிருந்தன. இந்தநிலையில் “டிரொஸ்டி யானெஸ்” நகரை ரஷ்ய படைகளிடமிருந்து தாம் மீண்டும் கைப்பற்றி மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த நகரமானது  ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இவ்விதமிருக்க உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து பிராந்திய கவர்னர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறும் போது, ‘‘லிவிவின் நகரை அண்டிய பிரதேசங்களில்  சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களைத்தேடி தஞ்சம் அடையுமாறு  அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்றார். லிவிவ் நகர், போலந்து நாட்டு எல்லையில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்துள்ள நிலையில் அந்நாட்டு எல்லை அருகே ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த தாக்குதல் ஜோபைடனுக்கு ரஷியா எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. மிகமிகக் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது உக்ரைனின்  துறைமுக நகரமான மரியுபோல் அதில்  90 சதவீத கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன. அந்த நகரில் இருந்து 1.40 லட்சம் மக்கள்  தப்பித்து பிற நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். மேலும்  1.70 லட்சம் மக்கள் அந்நகரில் வெளியேற முடியாத நிலையில்  சிக்கி இருப்பதாகவும்  மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது. உக்ரைனில் கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலை நிலையத்தை ரஷ்ய படைகள் ஏற்கனவே கைப்பற்றின.

செர்னோபில் அணு உலை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கும் ஸ்லா‌ஷட்பூச் நகரையும், நகர வைத்திய சாலையையும் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளதாக ரஷ்ய பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து வடக்கே 160 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அந்நகரில் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள், அத்துடன் செர்னோபில் அணு உலை நிலையத்தை ரஷியா போர் தொடங்கிய பிப்ரவரி 24ஆம் திகதி அன்றே கைப்பற்றி விட்டது. அந்த அணு உலை மூலமாக  ரஷ்யா நாச வேலையில் ஈடுபடலாம் என்று உக்ரைனானது பயங்கலந்த எச்சரிக்கையை   விடுத்து வருவது தெரிந்ததே. 

Spread the love