ரம்புக்கனை வன்முறை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு

நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோகினி மாரசிங்கவை சந்தித்து நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியோன் சுங் கலந்துரையாடியுள்ளார்.

ரம்புக்கனை வன்முறைகள் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையின்  அவசியம் குறித்து இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடப்பட்டதாக ஜூலி ஜியோன் சுங் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டக்காரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பணியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாக ஜூலி ஜியோன் சுங் குறிப்பிட்டார். 

Spread the love