யாழில் நேற்று(2.4.22) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் நடந்த இந்த போராட்டத்தில் மண்ணெண்ணெய், பெற்றோல், சமையல் எரிவாயு, பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

Spread the love