யாழில் இன்று ரம்புகனை படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனக்கோரி, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், “தேசிய எதிர்ப்பு தினம்” எனும் தொனிப்பொருளில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் பொது அமைப்புகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘கோட்டா வீட்டுக்கு போ, இலவச கல்வி, இலவச மருத்துவத்தை பாதுகாப்போம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ஒழி, விலைவாசியை குறை, ரம்புகனை படுகொலைக்கு நீதி வேண்டும்’ போன்ற பதாதைகளை ஏந்திக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love