மைதானத்தில் சரிந்து விழுந்த குசல் மெண்டிஸ் தற்போது வைத்தியசாலையில்

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் மென்டிஸ், டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 ஆவது ஓவரில் மெண்டிஸ் மைதானத்தில் நெஞ்சு வலியால் கீழே படுத்துவிட்டார். மருத்துவ ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் அவர் மார்பைப் பிடித்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவர் மன் சூர் ஹொசைன் சௌத்ரியின் கருத்துப்படி, கடும் வெயிலால் மெண்டிஸ் அதிக நீரிழப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும், இரைப்பை அழற்சியும் ஒரு காரணமாயிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவர் மன்சூர் ஹொசைன் சௌத்ரியின் தெரிவித்தார்.

Spread the love