மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான திகதி பக்கிங்ஹாம் அரண்மனையினால் அறிவிப்பு

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி மனைவி கமிலாவும் மன்னருடன் சேர்ந்து வரலாற்று விழாவில் முடிசூட்டப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதை அடுத்து சார்லஸ் மன்னர் மன்னரானார். மிகுந்த ஆடம்பரம் மற்றும் சடங்குகளுடன், ராஜா இறையாண்மையாக மூடிசூடப்பட்டு அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு பின்னர் முடிசூட்டு விழா முறையாக இடம்பெறவுள்ளது. இறுதியாக ஜூன் 1953 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூடிசூட்டு விழா இடம்பெற்றிருந்தது.

Spread the love