மில்கோ நிறுவனத்துக்கு பொதுஜன பெரமுன நிர்வாக செயலாளர் தலைவராக நியமனம்

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா MILCO (Pvt) Ltd இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

மில்கோ, இலங்கையில் அரசால் நடாத்தப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமாகும்.

முன்னர் லசந்த விக்கிரமசிங்கவின் தலைமையில் இருந்த இந்நிறுவனம்
லசந்த விக்ரமசிங்க, நீக்கப்பட்டு ரேணுகா பெரேரா நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் ரேணுகா பெரேரா லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நியமனத்தை இரத்து செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love