மிரிஹான போராட்டத்தில் 9 பேர் காயம்

மிரிஹானவில் நடந்த விசேட அதிரடிப்படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என்று சற்று முன்னர் கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது.

இதில் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்கு பேர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் இவர்களில் பலரும் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரவித்தன.

Spread the love