மின்தடை இன்று இல்லை

இன்றைய தினம் இலங்கையின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மக்கள் இன்றைய தினம் முழுமையாக மின்சாரத்தை பாவிக்கலாமென அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 3000 மெட்ரிக் தொன் டீசலினை வழங்கியுள்ளமையினால் மின்தடைக்கான தேவையில்லை எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் மின்தடை இல்லை என இலங்கை மின்சாரசபை அறிவித்த போதும் சில பிரதேசங்களில் திடீர் மின்தடைகள் ஏற்பட்டிருந்தன. அதனையும் மக்கள் கவனத்தில் கொண்டு செயற்படுதல் நலல்து.

Spread the love