மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும்: M.A. சுமந்திரன் தெரிவிப்பு

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். 

தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்திருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆகவே, சட்டத்திற்கு இணங்க தேர்தலை நடத்துவதாக இருந்தால், மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன் தேர்தல் நடத்தப்படவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

source from newsfirst
Spread the love