மஹிந்த மற்றும் பசில் அவர்களுக்கு சர்வதேச பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத்தடையை ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அதிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று புதன்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


எவ்வாறாயினும், குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால், அவரை விடுதலை செய்யுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

Spread the love