போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் 56 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நவால்னியை விடுவிக்கக்கோரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் பின்னர் ரஷ்யாவில் நடைபெற்ற பெரும் போராட்டமாக இது அமைந்திருந்தது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love