பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்பட்ட இராணுவ சிப்பாய்கள்

பொது இடத்தில் மது அருந்திய நிலையில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சிப்பாய்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நான்கு சிப்பாய்களும் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த நான்கு சிப்பாய்களையும் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கோமரங்கடவல கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love