பேரறிவாளன் விவகாரத்தில் நாங்களே முடிவெடுப்போம் உச்சநீதிமன்றம் தெரிவிப்பு 

பேரறிவாளன் விவகாரத்தில் நாங்களே முடிவெடுப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனால் தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் என வாதிடப்பட்டது.

ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதி மன்றம், பேரறிவாளன் விடுதலை விவகரத்தில் அமைச்சரவை முடிவெடுத்த பின் ஆளுநர் முடிவெடுக்க அவசியமே இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏன்? ஒன்றிய அரசு முடிவை அறிவிக்கவில்லையாயின் நாங்கள் முடிவை அறிவிக்கவேண்டியிருக்கும். அனைவரும் கண்மூடிக்கொண்டு இருக்கமுடியாது.

அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் ஏன் முடிவெடுக்க வேண்டும்? அரசியல் சாசனத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

Spread the love