பெற்றோல் இல்லாததால் விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டம்

யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்று வருகிறது. வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்ப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர் பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின. மீண்டும் எரிபொருள் கிடைக்காவிட்டால் தமது பணிப்புறக்கணிப்பை தொடர்து மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர். 

Spread the love