பாராளுமன்ற கட்டிடத்தில் ரணில் இன்று பதவியேற்பு

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இவரின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குமாறு நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் அனுமதியை கோரியிருந்தார்.

இதற்கமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முற்பகல் அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வையொட்டி பாராளுமன்ற வளாகம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Spread the love