பாக்கியலட்சுமி தொடர் – முக்கிய நடிகர் வெளியேற்றம்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகிவிட்டார். இனி அவருக்கு பதில் யாரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. தமிழ் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளை காட்டிலும் தொடர் நாடகங்களுக்கே கேள்வி அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் அதிக தொடர் நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்கள் அதிகம் பார்க்கும் தொடர் நாடகம் பாக்கியலட்சுமி ஆகும்.

இந்த தொடர் நாடகம் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார், அவரது கணவர் கோபியாக சதீஷ் நடிக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவியாக தனது அங்கீகாரத்திற்காக பாடுபடும் கதாபாத்திரம் சுசித்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கணவரிடம், மாமியாரிடம், பெண் குழந்தையிடம் அவமானப்படும் கதாபாத்திரம் , மகனிடம் அரவணைப்பு, மாமனாரிடம் பாசம் ஆகியவற்றை பெற எப்படியெல்லாம் சுசித்ரா போராடுகிறார் என்பதுதான் இந்த தொடர் நாடகத்தின் கதையாகும். கோபியாக நடிக்கு சதீஷுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் சகவாசம் இருக்க அந்த பெண்ணிற்காக 25 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவியை விவாகரத்து செய்ய துணிந்து விடுகிறார்.

எங்கே செல்கிறோம் என சொல்லாமல் பாக்கியாவை நீதிமன்றுக்கு அழைத்து செல்கிறார் கோபி. இவ்வாறு விறுவிறுப்பாக ஓடும் இந்த தொடர் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியேறி செல்கிறாராம்.

ராதிகா கதாபாத்திரத்தில் நந்திதா ஜெனிபர் நடித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

Spread the love