பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை இராணுவ படையினர் கைது செய்தனர்.

இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது காரை சுற்றி வளைத்த இராணுவ படையினர் , அவரை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இராணுவத்தை விமர்சித்து பேசியதற்காக அவரை கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love