பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை

கொழும்பில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Spread the love