பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கப்டன்

2022 ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க அகர்வால் கப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் லோகேஷ் ராகுல் கப்டனாக செயற்பட்டார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் சென்றுவிட்டார். அவர் அந்த அணிக்கு கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love