நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு!

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை நாட்டுக்குள் மேற்கொள்ளுமாறு சவுதி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸவுட் (Faisal bin Farhan Al Saud) தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சரான பைசல் பின் பர்ஹான் அல் ஸவுட் டன் நேற்று முன்தினம் (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குவிந்துள்ளது பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினர்.

கொவிட் பெருந்தொற்றின் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கம் தொடர்பில், இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸவுட் அவர்களால் அவதானம் செலுத்தப்பட்டதுடன் , பரிமாற்றங்கள் குறைதல், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, மின் உற்பத்தியில் தற்போதையவறட்சியான காலநிலையின் தாக்கம், மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தேவை பற்றியும் அதன் ஸ்திரமற்ற தன்மை பற்றியும் ஜனாதிபதி தெளிவு படுத்தினார்.

அவ்வேளை தமது நாடும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட சவுதி வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். பல்வேறு துறைகளின் தொடர்பின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசீர் அல் பர்ஹாத், சவுதி வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல் தாவூத், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் உடனிருந்து கலந்துரையாடலில்  பங்குபற்றியிருந்தனர்.

Spread the love