நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது- ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தாய்லாந்தில் உள்ள சூலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love