நாளை முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானம்

நாளை (22) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்துக்கான புகையிரத கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகையிரத கட்டண திருத்தத்தின்படி, புகையிரத கட்டணம் பேருந்து கட்டணத்தில் பாதியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love