நாட்டை வந்தடைந்துள்ள 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கப்பல்- இலங்கை நிலக்கரி நிறுவனம்

​மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று(25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று(26) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லமுடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் குறித்த கப்பல் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நிறுவனத்தி​ன் மேலும் 04 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இதேவேளை, நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான புதிய விநியோகஸ்தர் தெரிவு தொடர்பான ஒப்பந்ததாரருக்கான விண்ணப்ப காலம் நேற்றுடன்(25) முடிவடைந்ததாக இலங்கை நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.

Spread the love